/* */

கடையம் ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு

தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

HIGHLIGHTS

கடையம் ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக  இன்று தண்ணீர் திறப்பு
X

தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராமநதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் கடையம்,பொட்டல்புதூர்,உட்பட 11 கிராமங்களில் 21 குளங்கள் நிரம்புகிறது.

5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் பிசான சாகுபடிக்காக ராமநதி அணையில் இருந்து 03.11.2021 முதல் 30.03.2022 வரை 148 நாட்களுக்கு வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப திறந்துவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உள்ளிட்டோர் முன்னிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  5. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  6. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  7. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  8. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  9. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  10. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!