/* */

பழமை வாய்ந்த மரங்களை வெட்டிய நெடுஞ்சாலைத்துறை: முன்னாள் எம்எல்ஏ தடுத்து நிறுத்தம்

தென்காசி கடையம் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை வெட்டிய நெடுஞ்சாலைத்துறையினரை முன்னாள் எம்எல்ஏ தடுத்து நிறுத்தினார்.

HIGHLIGHTS

பழமை வாய்ந்த மரங்களை வெட்டிய நெடுஞ்சாலைத்துறை: முன்னாள் எம்எல்ஏ தடுத்து நிறுத்தம்
X

நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டிய அகற்றிய பழமைவாய்ந்த மரம்.

தென்காசி மாவட்டம், கடையம் யூனியன் அலுவலகத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு சாலையின் ஓரத்தில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன. இவகைளை கேரளாவுக்கு அளவுக்கதிகமாக மற்றும் உயரமான கனரக வாகனங்களில் கல் மணல் கொண்டு செல்ல இடையூறாக இருக்கிறது என நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி வருகின்றனர்.

தென்காசி ஆர்டிஓ விடம் அனுமதி பெற்றுதான் வெட்டி வருகிறோம் என்று கூறுகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் எம்எல்ஏ ரவிஅருணன், என்ன அனுமதி பெற்று மரத்தை வெட்டுகிறார்கள் என்று மரம் வெட்டுபவர்களை தடுத்து நிறுத்தினார்.

மேலும் இதுபோன்று கல் மணல் கொண்டு செல்லும் வாகனங்களால் சாலையும் பழுது படுகிறது. மரங்களையும் வெட்டினால் தொடர்ந்து பசுமை இயக்கங்களையும் சமூக ஆர்வலர்களையும் திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் கடையத்தில் நடத்தப்படும் என்று முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கூறினார்.

Updated On: 7 Jan 2022 12:50 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  2. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  3. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  4. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  5. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  6. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  7. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  8. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...
  9. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  10. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...