Begin typing your search above and press return to search.
அரசு பணி வழங்க வலியுறுத்தி விதவை பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடி வருவதாகவும், 12வது வரை படித்துள்ள தனக்கு ஏதேனும் ஒரு அரசு வேலை தரும்படி மனு அளித்தார்
HIGHLIGHTS
கணவர் இறந்து விட்ட நிலையில் விதவையான தனக்கு அரசு வேலை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணாம்பாள் என்பவர் கோரிக்கை மனு அளித்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பாபுரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கண்ணாம்பாள். இவரது கணவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்துவிட, உறவினர்கள் யாரும் உதவ முன்வராத நிலையில்,,இரண்டு சிறு பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடி வருவதாகவும், 12வது வரை படித்துள்ள தனக்கு ஏதேனும் ஒரு அரசு வேலை தரும்படியும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.மனுவை பெற்று்ககொண்ட மாவட்ட ஆட்சியர், அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார்.