சிவகங்கை அருகே காணாமல் போனவர் சடலமாக மீட்பு: காவல்துறையினர் விசாரணை
சிவகங்கை அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரு மாதமாக மாயமானவரை போலீசார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரு மாதமாக மாயமானவரை போலீசார் தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொம்புக்காரனேந்தல் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் உதயக்கண்ணன். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்துவரும் நிலையில் கடன் பிரச்சினை தொல்லையால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாயமானார்.
இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவரை தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை இடைக்காட்டூர் அருகே உள்ள சீரம்பட்டி விலக்கு பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணமல் போனவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.