/* */

சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மற்றும் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆட்சியர் ஆய்வு
X

ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மற்றும் இளையான்குடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவ்வூராட்சி ஒன்றியங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆண்டாய்வு மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர், இன்று சிவகங்கை மற்றும் இளையான்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும், அலுவலகப் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், காலிப்பணியிடங்கள் குறித்தும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான கோப்புகள் போன்றவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும், நிதிநிலை தொடர்பாகவும், அலுவலகங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டிடங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும், மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, நிலுவையிலுள்ள பணிகள் மற்றும் ஊராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் பா.மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), சோ.முனியாண்டி (இளையான்குடி), உதவி இயக்குநர் (தணிக்கை) ஏ.கந்தசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மா.வீரராகவன், உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) அரவிந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ச.அன்புச்செல்வி (வ.ஊ) (சிவகங்கை), க.ரெத்தினவேலு (கி.ஊ) (சிவகங்கை) மற்றும் வீ.ஆர்.திருநாவுக்கரசு (வ.ஊ) (இளையான்குடி), கே.சாந்தி (கி.ஊ) (இளையான்குடி), அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 April 2022 5:14 AM GMT

Related News