Begin typing your search above and press return to search.
சிவகங்கையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி
சிவகங்கையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் எச்.ஐ.வி., என்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு, 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள், உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதை அடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி, இப்பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணி, ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, சிவகங்கையின் பல்வேறு முக்கிய வீதி வழியாக சென்றது. முன்னதாக கலெக்டர் தலைமையில் அதிகாரிகள், எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.