/* */

ஸ்ரீ சோமநாதர் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஸ்ரீ ஆனந்தவல்லி ஸ்ரீ சோமநாதர் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வருடந்தோறும் சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த திருவிழாவில் மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். இதனால் சித்திரை மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழாவும் களைகட்டும். மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவது போல் மானாமதுரையில் நடைபெறும். விழாவின் நிறைவாக வைகையாற்றில் கள்ளழகர் இறங்குவது மிக சிறப்பாக நடைபெறும்.

இப்படிப்பட்ட உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழா கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி ஸ்ரீ ஆனந்தவல்லி ஸ்ரீ சோமநாதர் திருக்கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.ஒவ்வொரு மண்டகப்படி தாரர் நடத்தும் பத்துநாள் நிகழ்ச்சியும் பக்தர்கள் இன்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 17 April 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  3. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  4. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  6. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  8. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  9. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  10. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!