/* */

ஏற்காட்டில் நர்சிங் படித்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

ஏற்காட்டில் நர்சிங் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

ஏற்காட்டில் நர்சிங் படித்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது
X

ஏற்காட்டில் நர்சிங் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்

சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்தவர் அனிதா ( 59). இவர் நர்சிங் படித்து விட்டு ஏற்காடு பிளியூர் கிராமத்தில் தன்னை மருத்துவர் என்று கூறி கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த ஏற்காடு தாசில்தார் பொன்னுசாமி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மாதையன் ஆகியோர் பிளியூர் கிராமத்துக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நர்சிங் படித்து விட்டு மருத்துவர் என்று கூறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ஏற்காடு காவல்துறையினர் போலி மருத்துவர் அனிதாவை கைது செய்தனர்.

Updated On: 26 May 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  2. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  6. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  7. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  9. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்