/* */

காட்டுத் தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் மனு

கோடை காலத்தில் செயற்கையாக காட்டுத்தீயை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

காட்டுத் தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் மனு
X

மலைகள் சூழ்ந்த மாவட்டமான சேலத்தில் கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அலுவலரிடம் இயற்கை ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. குறிப்பாக கோடை காலம் தொடங்கியது முதல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு காட்டுத்தீ பரவல் அதிக அளவில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பிலான மரங்கள் அரிய வகை மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பல் ஆவது தொடர் கதையாக உள்ளது.

மேலும் வனம் மற்றும் மலைப் பகுதியில் வாழ்ந்து வரும் விலங்குகள் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து வருவதாகவும், இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் காட்டுத்தீயை செயற்கையாக பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காட்டுத் தீ பரவலை தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீயணைப்பு துறை வனத்துறை மற்றும் அந்தந்த பகுதி பொது மக்களை இணைத்து பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On: 10 March 2021 9:23 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...