/* */

கொரோனா இறப்பு வதந்தியா?... எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!

கொரோனா இறப்பு வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா இறப்பு வதந்தியா?... எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!
X

சேலத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது.

சேலம் அரசு மருத்துவமனை மற்றும் இரும்பாலையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து பின்னர் குறைந்து வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடித்தால் இந்நோய் தொற்று பாதிப்பு மேலும் குறையும் என்றார்.

தமிழகத்தில் இந்நோய் பாதிக்கப்படுபவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் வகையில் பரிசோதனை ஆய்வகங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர் 3வது அலை 4வது அலையை எதிர்கொள்ள தேவையான மருத்துவ கட்டமைப்பை உருவாக்க மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு 1,790 மருந்து குப்பிகளை அனுப்பி உள்ளதாகவும், மத்திய அரசு ஏற்கனவே அனுப்பிய 13.1 லட்சம் கொரோனா தடுப்பூசி அடுத்த இரு தினங்களில் முடியும் தருவாயில் உள்ளதால் கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும் கூறினார்.

தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த அவர், பணம் சம்பாதிக்கும் நோக்கில் தனியார் மருத்துவமனைகள் செயல்படக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். கொரோனா இறப்பு குறித்து யாரேனும் வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 29 May 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!