/* */

குழந்தையை கடத்திய 7 மணி நேரத்தில் மீட்ட போலீசார்: பெண் அதிரடி கைது

Salem News today: வாழப்பாடி அருகே குழந்தையை கடத்தியதாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

குழந்தையை கடத்திய 7 மணி நேரத்தில் மீட்ட போலீசார்: பெண் அதிரடி கைது
X

கடத்தப்பட்ட குழந்தை கவின்.

Salem News today: சேலம் மாவட்டத்தின் வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி கிராமத்த்தில் வசித்து வருபவர் செந்தில்குமார் (42), கட்டிடத் தொழிலாளியான இவருக்கு மனைவி தனலட்சுமி, திருமுருகன் (11), கவின் (2) என்ற 2 மகன்களும், யாழினி (7) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை வீட்டின் அருகே 2 வயது குழந்தையான கவின் விளையாடிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அந்த குழந்தை திடீரென காணாமல் போனதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, அவரது வீட்டின் அருகில் வசிக்கும் லட்சுமி என்பவரின் வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்த உறவினர் பழனியம்மாளுடன் (34) அந்த குழந்தையை பார்த்ததாக தெரிவித்தனர்.

இதனை கேள்விப்பட்ட செந்தில்குமார், தனது குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என , உடனடியாக வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அப்போது செந்தில்குமாரின் உறவினர்கள் ஏராளமானோர் காவல் நிலையத்தில் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பழனியம்மாள் என்ற பெண்ணின் மீது சந்தேகம் இருப்பதாக கூறிய புகாரின் பேரில் லட்சுமியின் வீட்டில் இருந்த அந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பெண் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். ஆனால் தொடர்ந்து நடைபெற்ற தீவிர விசாரணையில் அவர் குழந்தையை கடத்தியதை ஒப்புக்கொண்டார்.

கடத்தப்பட்ட குழந்தை கவினை சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் விட்டு விட்டு வந்ததாக போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு விரைந்த வாழப்பாடி போலீசார் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மாலை 4 மணியளவில் குழந்தை கவினை மீட்டனர்.

பழனியம்மாளிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சொந்த ஊர் வெள்ளாளகுண்டம் என தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணமாகி தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் அவருக்கு 16 வயதில் மகளும், 14 வயதில் மகனும் இருப்பது தெரியவந்துள்ளது.

பழனியம்மாள் கடந்த 2 நாட்களுக்கு முன்னரே சேசன்சாவடியில் உள்ள தனது உறவினரான லட்சுமியின் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கேயே தங்கியிருந்த பழனியம்மாள் நேற்று காலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கவினை கடத்தி சேலத்திற்கு சென்றுள்ளார். பின்னர் சேலம் 5 ரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அந்த குழந்தையை கொண்டு சென்றார். அந்த குழந்தை தனது குழந்தை என்றும், துக்க வீட்டுக்கு சென்று வரும் வரை குழந்தை இங்கே இருக்கட்டும் என குழந்தை கவினை உறவினர் வீட்டில் விட்டுள்ளார். அங்கிருந்து மீண்டும் சேசன்சாவடி பகுதிக்கே திரும்ப வந்து ஒன்றும் தெரியாதவர் போல நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையை கடத்திய பழனியம்மாளை வாழப்பாடி போலீசார் கைது செய்தனர். குழந்தை காணாமல் போன 7 மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் வாழப்பாடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 April 2023 5:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  2. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  3. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு