/* */

பாதுகாப்புபணிக்கு வந்த துணை ராணுவத்தினர் சொந்த ஊருக்கு திரும்பினர்.

சேலத்துக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த துணை ராணுவத்தினர் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

HIGHLIGHTS

பாதுகாப்புபணிக்கு வந்த துணை ராணுவத்தினர் சொந்த ஊருக்கு திரும்பினர்.
X

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 280 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் அன்று பாதுகாப்பு பணியில் வடமாநிலங்களில் இருந்து வந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவத்தினரை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 107 பேர் தங்களது உடைமைகளுடன் சேலம் வழியாக சென்ற ரெயில் மூலம் மத்திய பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.

அதேபோல், துணை ராணுவ படையை சேர்ந்த 135 பேரும் சேலத்தில் இருந்து ரெயில் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மீதமுள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவ படையினர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 10 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  2. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  3. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  4. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  5. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  8. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  9. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  10. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?