/* */

சேலம் மாநகராட்சியில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சியில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
X

சேலம் மாநகராட்சியில் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆணையர். 

கொரோனா நோய் தொற்று தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வார நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட தற்காலிக பேருந்து நிலைய வளாகம், சாலையோர கடைகள், தனியார் துணிக்கடைகளில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கொரோனாவில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் முகக்கவசத்தை வழங்கினார். மேலும் அரசால் அறிவிக்கப்படுகின்ற அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றிட வேண்டும் என கேட்டுகொண்டார்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சின்னக்கடை வீதி, முதல் அக்ரஹாரம் தெருவில் உள்ள தனியார் ஜவுளிக்கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், ஜவுளிகடையில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை வழிமுறைகள் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, கிருமி நாசினி சரியான முறையில் தெளிக்கப்பட்டுள்ளதா, ஜவுளிகடைக்கு வரும் வாடிக்கையாளர்களை காய்ச்சல் கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறதா, அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டதற்கு முறையாக பதிவேடு பராமரிக்கப்பட்டு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.


Updated On: 4 Aug 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’