/* */

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கை கழுவும் முறை : விழிப்புணர்வு முகாம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கைகளை கழுவும் முறை குறித்த விழிப்புணர்வு முகாம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கை கழுவும் முறை : விழிப்புணர்வு முகாம்
X

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கைகளை கழுவும் முறை குறித்த விழிப்புணர்வு முகாம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி குகை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா நோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வு முகாமின் ஒரு பகுதியான கைகளை கழுவும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முகாமினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் இன்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையாளர்:

கொரோனா நோய் தொற்று தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வாரம் 01.8.2021 முதல் 07.8.2021 வரை நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்தும், கைகளை கழுவும் முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கையோடு கை சேர்த்து கழுவ வேண்டும், வலது விரல்களை இடது விரல் இடுக்குகளில் நுழைத்து மாறி மாறி தேய்க்க வேண்டும், விரல்களை கோர்த்து இரு கைகளையும் தேய்க்க வேண்டும். கைகளை விரல்களின் பின்பக்கமாக தேய்க்கவும், கட்டை விரல்களை சுழற்றி இரு கைகளையும் தேய்க்கவும், பின்பக்கம் முன்பக்கமாக விரல்களை சுழற்றி சுழற்றி தேய்த்து கழுவ வேண்டும் போன்ற வழிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றிட வேண்டும்.

இந்த வழிமுறைகளை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். வீட்டை விட்டு வெளியில் சென்று வந்த பிறகு கைகளை சுத்தமாக சோப்பு பயன்படுத்தி கழுவிட வேண்டும். இது போன்ற வழிமுறைகளை அனைவரும் அவசியம் கடை பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Updated On: 2 Aug 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’