/* */

இரண்டாம் நிலை பெண் காவலர் உடல் தகுதி தேர்வு

சேலத்தில் இரண்டாம் நிலை பெண் காவலர் உடல் தகுதி முதற்கட்ட தேர்வில் பங்கேற்ற திருநங்கை தேர்ச்சி பெற்றார்.

HIGHLIGHTS

இரண்டாம் நிலை பெண் காவலர் உடல் தகுதி தேர்வு
X

திருநங்கை ரூபா.

சேலம் குமரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 460 பெண்கள் பங்கேற்ற நிலையில் ஓட்டபந்தயம், உயரம் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் காதப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரூபா என்ற திருநங்கை பங்கேற்று உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் சக தேர்வர்கள் ஆகியோர் திருநங்கை ரூபாவிற்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினர். மற்ற திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக காவலர் உடற்பயிற்சி தேர்வில் பங்கேற்க வந்த ரூபாவிற்கு பாராட்டு தெரிவித்தனர்.

கட்டிட பொறியாளர் பட்டம் பெற்ற தான் தனது பெற்றோரின் வழிகாட்டுதல்படி அரசுப்பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தில் காவல்துறை தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்ததாக ரூபா தெரிவித்தார். தன்னைப்போன்ற திருநங்கைகளுக்கு ஏற்கனவே உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்ட பிரித்திகா யாஷினி ஒரு முன் உதாரணம் என்று திருநங்கை தெரிவித்தார்.

Updated On: 5 Aug 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி