/* */

போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்தால் நடவடிக்கை:அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

சேலத்தில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், வணிகர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, அனைத்து வணிக நிறுவனங்களும் நிலுவையில் உள்ள வரிபாக்கியை விரைந்து செலுத்த வேண்டும், போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்தால் சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி, வணிகவரி முதன்மைச் ஆணையர் சித்திக் மற்றும் வணிகவரித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் பலர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து இன்றுமாலை சேலம் உள்பட 4 மாவட்டத்தை சேர்ந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மூர்த்தி ஆலோசனை நடத்துகிறார்.

Updated On: 13 July 2021 6:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...