/* */

வெளியே திரிந்தவர்களுக்கு கட்டாய கொரோனா டெஸ்ட்: மனித உரிமைமீறல் என புகார்!

கட்டாய கொரானா பரிசோதனை என்பது மனித உரிமை மீறல்; சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, சேலம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில், தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர மற்றவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு அறிவித்தது. ஆனால் இதனை பொருட்படுத்தாமல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில், பொதுமக்கள் வெளியே வந்து செல்கின்றனர். இதனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் .

இதையடுத்து, தேவையில்லாமல் வெளியே திரிபவர்களுக்கு நூதன தண்டனையை போல், கட்டாய கொரானா பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியே வந்தவர்களை பிடித்து கட்டாய கொரானா பரிசோதனை மேற்கொண்டனர்.

ஆனால், இவ்வாறு கட்டாய பரிசோதனை செய்வது மனித உரிமை மீறல்; இது குறித்து எந்த அரசு ஆணையிலும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று சேலம் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு சீர்திருத்த இயக்க தலைவர் ஜெயசீலன் அளித்த மனுவில், கட்டாய பரிசோதனை செய்த காவல்துறையினர், சுகாதாரத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Updated On: 5 Jun 2021 3:44 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?