/* */

இரும்பாலை எல்லைக்குட்பட்ட இடங்களில் 176 சிசிடிவி கேமராக்கள் அமைப்பு

சேலம் இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 176 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை மாநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

இரும்பாலை எல்லைக்குட்பட்ட இடங்களில் 176 சிசிடிவி  கேமராக்கள் அமைப்பு
X

சிசிடிவி செயல்பாட்டினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா இன்று துவக்கி வைத்தார்.

சேலம் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகரம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் இரும்பாலை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் 176 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் செயல்பாட்டினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து சிசிடிவி பொறுத்துவதற்கு உறுதுணையாக இருந்த தன்னார்வலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் மோகன்ராஜ், மாடசாமி, உதவி ஆணையாளர் நாகராஜ் மற்றும் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Updated On: 23 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  2. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  3. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  4. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  5. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  7. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  8. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  10. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...