/* */

சேலத்தில் கோடி கணக்கில் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார்

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கோடி கணக்கில் மோசடி செய்தவர்களை கைது செய்ய பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகாரளித்தனர்.

HIGHLIGHTS

சேலத்தில் கோடி கணக்கில் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார்
X

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த பாதிக்கப்பட்டவர்கள்.

சேலம் தமிழ் சங்கம் சாலையில் எக்ஸ்போர்ட் நிறுவனம் நடத்திவரும் ஸ்ரீஷா சிங் மற்றும் ஜெயா சமீர் பதான் ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்தை 6 மாதத்தில் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பலரிடம் சுமார் நூறு கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மோசடியில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து, தாங்கள் இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பலரிடம் இந்த கும்பல் தங்களது கைவரிசையை காட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் பேராசையில் பலர் லட்சம் லட்சமாக இப்படி பணத்தை இழந்து கொண்டுதான் இருக்கின்றனர். பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இதுபோன்ற மோசடி சம்பவங்களை தடுக்க முடியும்.

Updated On: 6 Dec 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...