/* */

ஓமலூரில் பலத்த காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்து சேதம்

தும்பிபாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையில், வாழை மரங்கள் சாய்ந்து சேதம்

HIGHLIGHTS

ஓமலூரில் பலத்த காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்து சேதம்
X

ஓமலூர் அருகே பலத்த காற்றினால் அறுவடைக்கு தயாரான வாழைமரங்கள் சேதமடைந்தது

ஓமலூர் அருகே தும்பிபாடி ஊராட்சி, முள்ளுசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் திசு வாழை பயிரிட்டுள்ளார்.

இந்த வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று தும்பிபாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதில் பலத்த காற்றினால் ரமேஷ் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் முற்றிலுமாக சாய்ந்து சேதம் அடைந்தன.

இதுகுறித்து விவசாயி ரமேஷ் காடையாம்பட்டி தாசில்தார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தார். சேதமடைந்த வாழை மரங்களின் மதிப்பு சுமார் ரு.2 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Updated On: 15 April 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  4. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  5. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  6. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  7. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  8. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?