/* */

மேட்டூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது - 600 லிட்டர் ஊறல் அழிப்பு

மேட்டூர் அருகே வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 600 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மேட்டூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது -  600 லிட்டர் ஊறல் அழிப்பு
X

மேட்டூர் அருகே வனப்பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர், கும்பாரப்பட்டி வனப்பகுதியில் சட்ட விரோத கும்பல்கள் முகாமிட்டு கள்ள சாராயம் காய்ச்சுவதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கும்பாரப்பட்டி வனப்பகுதிக்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இவர்களை சுற்றி வளைத்த போலீசார், ராஜி,மாது ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய குருசாமி, முருகேசன், ரகு ஆகிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர். கும்பாரப்பட்டியில் நடந்த சாராய சோதனையில் 600 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 60 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

Updated On: 22 Jun 2021 6:26 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா