/* */

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை

தலைவாசல் அருகே சட்டவிரோதமாக அரசு மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது. 2250 மது பாட்டில்கள் பறிமுதல்

HIGHLIGHTS

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை
X

கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கடந்த 10ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதை அடுத்து அரசு டாஸ்மாக் கடைகள் 10ந்தேதி முதல் 24ம் தேதி வரை செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, தலைவாசல்,வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்யும் நபர்கள், கடந்த பத்தாம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பெட்டி பெட்டியாக வாங்கி சென்று பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிக்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆத்தூர் DSP தனிப் படையினர் உதவி ஆய்வாளர்கள் கோபால் மற்றும் மூர்த்தி ஆகியோரின் தலைமையில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது தலைவாசல் அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சிவலிங்கம்(45) என்பவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த 2250 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து சிவலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 May 2021 11:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’