/* */

சேலம் மாவட்டத்தில் ஒரேநாளில் 18 பேர் கொரோனாவுக்கு பலி

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 18 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3475 ஆக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில்  ஒரேநாளில் 18 பேர் கொரோனாவுக்கு  பலி
X

சேலம் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரத்து 929 பேர் பாதிக்கப்பட்டு 43 ஆயிரத்து 832 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 475 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 622 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரேநாளில் சேலம் மாவட்டத்தில், கொரானாவால் 622 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினந்தோறும் சேலம்அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ஆக்சிஜன் வசதி இல்லாததாலும், படுக்கை வசதிகள் கிடைக்காததாலும் ஆம்புலன்சில் இருந்த படியே நோயாளிகள் உயிரிழப்பது வாடிக்கையாக தொடர்ந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆக்சிஜன் கூடிய படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 May 2021 7:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  4. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  6. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  7. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  8. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  9. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  10. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...