/* */

அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்

வாலாஜாப்பேட்டை அடுத்த அம்மன்தாங்கல் கிராமத்தில் சாலை மற்றும்அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்
X

அடிப்படை வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அம்மன்தாங்கல் கிராமப் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மக்கள், சாலை ,கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர் .

இதுகுறித்து ,வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனுக்களை பலமுறை அளித்துள்ளனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள், அங்குள்ள சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளைக் கண்டித்தும்,கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றக் கோரியும். கோஷங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாலாஜா போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கை விட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Updated On: 25 Aug 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  2. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  6. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  7. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை