Begin typing your search above and press return to search.
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் குட்டையில் மூழ்கி பலி
இராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அண்ணாநகரைச் சேர்ந்த இளைஞர் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது குட்டையில் மூழ்கி பலியாகினார்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம்,இராணிப்பேட்டை அடுத்த சிப்காட், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகாந்த்(35). ஆடு மேய்த்து வந்த அவருக்கு திருமணமாகவில்லை. எனவே , அவரது சகோதரி வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் விஜயகாந்த் வழக்கம் போல ஆடுகளை மேய்க்க அருகிலுள்ள குட்டைப்பகுதிக்கு ஓட்டிச்சென்று மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது உறவினர் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்தில் விஜயகாந்தைக் காணவில்லை என்பதால் தேடிப்பார்த்த போது, விஜயகாந்தின் செருப்பு மட்டும் குட்டையின் ஓரம் இருந்தது. எனவே உறவினர்கள் குட்டையில் இறங்கி தேடியபோது, விஜயகாந்த்தை சடலமாக கண்டு மீட்டெடுத்தனர். இதுகுறித்து அவரது சகோதரி உமா தந்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்..