/* */

அரக்கோணம் நகராட்சி தலைவராக லட்சுமிபாரி தேர்வு

அரக்கோணம் நகராட்சியில் நகரமன்ற தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலில் நகராட்சி தலைவராக லட்சுமிபாரி தேர்வு செய்யப்பட்டார்

HIGHLIGHTS

அரக்கோணம் நகராட்சி தலைவராக லட்சுமிபாரி தேர்வு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரக்கோணம் நகராட்சியில் நகரமன்ற தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தலைவர் பதவிக்கு 16-வது வார்டில் தி.மு.க.சார்பில் வெற்றிபெற்ற லட்சுமி பாரியும், 15-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற நித்யா ஷியாம்குமாரும் போட்டியிட்டனர்.

இதில் லட்சுமி பாரி 27 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.. இதனையடுத்து நகரமன்ற துணைத்தலைவராக 10-வது வார்டில் தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற கலாவதி அன்புலாரன்ஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற தலைவர் லட்சுமிபாரி மற்றும் துணைத்தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ் மற்றும் கவுன்சிலர்கள் ஊர்வலமாக சென்று சுவால்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 5 March 2022 4:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!