/* */

நம்புதாளை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் மனு

நம்புதாளை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் மனு அளித்துள்ளார்.

HIGHLIGHTS

நம்புதாளை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் மனு
X

பைல் படம்.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி திருவாடானை தாலுகா நம்புதாளை ஊராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட ஊராக இருந்து வருகிறது. இந்த ஊராட்சிக்கு தினமும் சுமார் 40 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஊராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு தினமும் குடிநீர் வழங்க முடியவில்லை.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் சுழற்சி முறையில் 10 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சமாக மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே நம்புதாளை ஊராட்சிக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப தினமும் கூடுதலாக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்புதாளை ஊராட்சி தலைவர் பாண்டிச்செல்வி ஆறுமுகம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

Updated On: 7 April 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை