/* */

இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு கடத்த முயன்ற இருவர் கைது

இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு, மற்றும் கிளிகள் கடத்த முயன்ற இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு கடத்த முயன்ற இருவர் கைது
X

இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு, மற்றும் கிளிகள் கடத்த முயன்ற இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு வைத்திருப்பதாக உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வனவர் சடையாண்டி தலைமையிலான வனத்துறையினர் இராமநாதபுரம் ரெயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை மடக்கிபிடித்து சோதனை செய்த போது அவர்களிடம் சுமார் 3 கிலோ எடையுள்ள மண்ணுளிப் பாம்பு மற்றும் 6 நாட்டு பச்சை கிளிகள் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் ராபர்ட் சர்ஜி மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்துதங்கம் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இவற்றை விற்பனை செய்யும் நோக்கத்துடன் கொண்டு சென்ற இருவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 5 April 2022 12:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!