/* */

இராமேஸ்வரத்தில் சுனாமி ஆழிப்பேரலையின் 17-ம் ஆண்டு நினைவஞ்சலி

சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு இராமேஸ்வரத்தில் 17 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

இராமேஸ்வரத்தில் சுனாமி ஆழிப்பேரலையின் 17-ம் ஆண்டு நினைவஞ்சலி
X
சுனாமி பதினேழாம் ஆண்டு நினைவு நினைவு நாளையொட்டி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடல் அன்னையை வணங்கினார்கள்.

சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு 17 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நடைபெற்றது. தமிழ்நாடு மீனவர் பேரவை இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் அதன் தலைவர் பிரிண்சோ ரைமன்ட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதே போல தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாம்பன் வடக்கு கடற்கரையில் அதன் தலைவர் சின்னதம்பி தலைமையில் மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் ஏராளமானோர் சுனாமிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களை நினைவு கூறும் வகையிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மீண்டும் கோபம் கொண்டு எங்களை அழித்துவிடாதே என்று கடல் தாயிடம் வேண்டிக்கொண்டனர். மேலும் கடல் வளம் காப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Updated On: 26 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!