இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: நோய் தாெற்று பரவு அபாயம்
இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் பக்தர்களிடையை பீதி.
HIGHLIGHTS
இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஆடி, பாடி சாமி தரிசனத்தால் உள்ளூர், மற்றும் வெளியூர் பக்தர்களிடையை பீதி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
வெள்ளி,சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட மூன்று நாட்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்காணோர் சமூக இடைவெளியை மறந்து கடலில் குளித்தனர். முகக்கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக அரசு விதி மீறி குவிந்த சுற்றுலா பயணிகளால் நோய்த்தொற்று அபாயம் உருவாகும் என உள்ளூர் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு,இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு, கோவில்களில் சாமி தரிசனத்திற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை இன்று இரவு முதல் அமல் படுத்தவுள்ளது. இதனையொட்டி வெள்ளி சனி ஞாயிறு உள்ளிட்ட மூன்று நாட்கள் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அரசு அறிவிப்பால் இன்று அதிகாலை முதல் உலக சுற்றுலாத் தலமும் புண்ணிய திருத்தலமான ராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். இவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கடலில் நீராடியதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
அதே போல கூட்டம் கூட்டமாக கோவிலின் முன் பகுதியில் குவிந்தனர். கோயிலுக்குள் முழுக் கட்டுப்பாட்டுடன் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டாலும், சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாக சாமி தரிசனம் செய்வதும் கோயிலுக்குள் வட மாநில பக்தர்கள் ஆடி,பாடி சாமி தரிசனம் செய்தது உள்ளூர் பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.