/* */

தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீன் பிடித்த விசைப்படகுகள் பறிமுதல்

மண்டபம் கடல் பகுதியில் இரட்டை மடி வலையில் மீன் பிடித்த 2 விசைப்படகுகள், 1.5 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீன் பிடித்த விசைப்படகுகள் பறிமுதல்
X

மண்டபம் பகுதியில்  விசைப்படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரிகள்.

மண்டபம் கடல் பகுதியில் இரட்டை வலையில் மீன் பிடித்த 2 விசைப்படகுகள், 1.5 டன் மீன்கள் பறிமுதல்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் இருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று முன் தினம் கடலுக்குச் சென்றன. அதில் ஒரு சில படகுகள் அரசு தடை செய்த இரட்டை வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மண்டபம் மீன்வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயிலானி தலைமையில் மீன்வளத்துறை ஊழியர்கள், மெரைன் போலீசார் ரோந்து படகில் சென்று கரை திரும்பிய படகுகளில் சோதனை செய்தனர். அப்போது அரசு தடை செய்த இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த மண்டபம் பாஸ்கரன், தங்கச்சிமடம் ஆரோக்கிய செல்வம் ஆகியோரது விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அப்படகுகளில் இருந்த 1.5 டன் மீன்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 10 Sep 2021 12:59 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...