/* */

குத்துச்சண்டை போட்டி: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற ஜே ஜே கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஜே ஜே கல்லூரி மாணவிகள் கைப்பற்றினர்.

HIGHLIGHTS

குத்துச்சண்டை போட்டி: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற ஜே ஜே கல்லூரி மாணவிகள்
X

குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் காட்சி.

புதுக்கோட்டை சிவபுரம் அருகே உள்ள ஜேஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த குத்துச்சண்டை போட்டியில் 20 க்கும் மேற்பட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு எடை பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஜேஜே கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வென்றனர்.

இந்த போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவரும் செயலாளருமான காளிதாசன் மற்றும் ஜேஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பரசுராமன், டாக்டர் சிவகுமார், ஜேஜே கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி துறை தலைவர் ஜெகதீஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 Dec 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!