Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டை அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி.
புதுக்கோட்டை அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் டூவீலரில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே திருச்சி- புதுக்கோட்டை புறவழிச்சாலை செங்குடிகோவில் அருகில் இன்று கீரனூரை சேர்ந்த முகமது சரீப் மகன் ஷாஜகான் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேய இறந்தார்.
இறந்தவர் உடல் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. . மேலும்,இவ்விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.