வரத்து வாரிகளில் செல்லும் மீன்களை பிடித்து விற்பனை செய்யும் இளைஞர்கள்
மீன்கள் உயிரோடு இருப்பதாலும் பிடிக்கும் இடத்திலேயே சுத்தம் செய்து தருவதாலும் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் பெய்த கனமழையின் காரணமாக கண்மாய்கள் நீர்நிலைகள் நிரம்பி வெளியேறும் வாய்க்கால்கள் மற்றும் வரத்து வாரிகளில் அடித்துச்செல்லும் மீன்களை தூண்டில் மற்ரும் வலை போட்டு பிடித்து இளைஞர்கள் விற்பனை செய்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் குளங்கள் அனைத்தும் நிரம்பி அதிலிருந்து உபரிநீர் வரத்து வாய்க்கால்கள் மூலம் குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு வெளியேறி வருகின்றது.
இந்நிலையில் புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னரில் இருந்து மேட்டுப்பட்டி செல்லம் மருப்பிணி சாலையில் உள்ள குளத்திற்கு வரத்து வாய்க்கால் மூலம் வரும் உபரி நீரில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிக அளவில் தூண்டில்கள் போட்டு மீன்பிடித்தனர்.இதில் பிடிபடும் கெண்டை, சிலேப்பிகெண்டை போன்ற நாட்டு மீன்களை பிடிக்கின்றனர்.இவ்வாறு குளத்தில் மற்றும் வரத்து வரிகள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் உயிரோடு இருப்பதாலும் பிடிக்கும் இடத்திலேயே சுத்தம் செய்து தருவதாலும் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.