தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் மாநாடு
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் மாநாடுஇன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
Tamil Nadu A.I.T.U.C. Building Workers Union Representative Conferenceதமிழ்நாடு ஏ. ஐ. டி. யு. சி.கட்டிட தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட எட்டாவது பிரதிநிதிகள் மாநாடு இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஜி. நாகராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுரேஷ் சங்க கொடியேற்றி தொடக்க உரையாற்றினார்.ஏ. ஐ. டி. யு. சி. மாவட்ட தலைவர்.கே ஆர் தர்மராஜன் அமைப்பு நிலைகுறித்து பேசினார்.
Tamil Nadu A.I.T.U.C. Building Workers Union Representative Conferenceடாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சௌந்தரராஜன்,கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் ஜீவானந்தம்,அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி எம். மீரா மைதீன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னவாசல் ஒன்றிய செயலாளர்ஏ. நாகராஜ் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினார்கள்.
Tamil Nadu A.I.T.U.C. Building Workers Union Representative Conferenceஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் த .செங்கோடன் நிறைவுரையாற்றினார் .புதிய நிர்வாகிகள் தலைவர்ஜி .நாகராஜ், செயலாளர் டி .ராஜா பொருளாளர் கே கணேசன்,துணைத் தலைவர் கே. ஆர். தர்மராஜன், அழகு மன்னன், துணைச் செயலாளர் டி .சின்னையா, அமல்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
Tamil Nadu A.I.T.U.C. Building Workers Union Representative Conference60 வயது நிறைந்த கட்டுமான தொழிலாளர்களுக்குமாதம் 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீடு கட்டிக் கொள்ள நலவாரியத்தில் நடைமுறைகளை எளிமைப்படுத்தி 4 இலட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும்.
பெண் கட்டுமான தொழிலாளிக்கு பேறுகால உதவி தொகை மாதம் ரூ. 15,000 வீதம்ஆறு மாதங்களுக்கு 90 ஆயிரம் வழங்க வேண்டும் இ. எஸ். ஐ., பி. எப். திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
Tamil Nadu A.I.T.U.C. Building Workers Union Representative Conferenceகட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய பரிந்துரைக்க கிராம நிர்வாக அலுவலர்கள் பழைய ரேஷன் கார்டு கேட்பதை தவிர்க்க வேண்டும்.சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு தெரியப்படுத்தாமல் விசாரிக்காமல் மனுவை நிராகரிப்பதை தவிர்க்கவேண்டும். ஆன்லைன்பதிவை மாத கணக்கில் கிடப்பில் போடாமல்உடனுக்குடன் பரிந்துரைசெய்ய வருவாய்த்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.முடிவில் பொருளாளர் கே. கணேசன் நன்றி கூறினார்.