/* */

புதுக்கோட்டை: தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ஆட்சியர் விருது

மாவட்டத்தில் தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது

HIGHLIGHTS

புதுக்கோட்டை: தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ஆட்சியர் விருது
X

தோட்டக்கலைத்துறை சார்பில் சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில், தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில், சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விருதுகள் வழங்கினார்.

தோட்டக்கலைத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுதல், பண்ணை இயந்திர மயமாக்குதல், நீர் மேலாண்மையில் ஊடு பயிர், கலப்பு பயிர், பல அடுக்குப் பயிர் முறைகளை பின்பற்றுதல், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தரிசு நில தோட்டக்கலை சாகுபடி செய்யும் சிறந்த விவசாயி களுக்கு சான்றிதழ்களுடன் கூடிய ரொக்கப் பரிசு வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் வண்ணாரப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்ற விவசாயிக்கு முதல் பரிசாக ரூ.15,000 -மும், குளவாய்பட்டியை சேர்ந்த அர்ஜுனன் என்ற விவசாயிக்கு இரண்டாம் பரிசாக ரூ.10,000 -மும், காடம்பட்டியை சேர்ந்த சாந்தி என்ற விவசாயிக்கு மூன்றாம் பரிசாக ரூ.5,000 -மும் என மொத்தம் ரூ.30,000 க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குநர் குருமணி, உதவி இயக்குநர்கள் மா. கார்த்தி ப்ரியா (புதுக்கோட்டை), ஏ.காளிசரண் (கறம்பக்குடி) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 19 April 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு