Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி, எம்எல்ஏ முத்துராஜா துவக்கிவைத்தார்
புதுக்கோட்டை நகராட்சியில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ முத்துராஜா தொடங்கிவைத்தார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் வாகனத்தை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு வார்டுக்கும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் வகையில், கொரோனா விழிப்புணர்வு ஒலிபெருக்கியுடன் கூடிய 12 வாகனங்கள் மூலம் பணிகள் துவங்கியது..இந்த நிகழ்வில் நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியம் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.