Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டை நகராட்சி அம்மா உணவகத்தில் இலவச உணவு : அமைச்சர் தொடங்கி வைப்பு
புதுக்கோட்டை நகராட்சியில் அம்மா உணவங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார்.
HIGHLIGHTS
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி, புதுக்கோட்டை நகராட்சி அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்க ரூ 1.5 லட்சத்தை நகராட்சி நிர்வாகத்திடம் அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
அதன்படி இன்று புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் ராணியார் மருத்துவமனை உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கு திட்டத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கிதைவத்தார். ஊரடங்கு முடியும் வரை இங்கு உணவு சாப்பிட வருபவர்கள் பணம் தரவேண்டாம். இதற்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டேன் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் புதுக்கோட்டைஎம்எல்ஏ முத்துராஜா, நகராட்சி பொறியாளர் வாசுப்பிரமணியன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.