புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக மது பாட்டிகள் விற்பனை செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
கொரோனா . தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு முழு ஊரடங்கைஅறிவித்தது குறிப்பாக அரசு மதுபான கடைகள் திறக்கப்படாது என கூறியிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 11ஆம் தேதி சட்டவிரோதமாக 2692 மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆறுமுகம், சக்திவேல், கலியபெருமாள் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டதையடுத்து அவர்கள் மூவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் இன்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
சட்ட விரதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்