/* */

சுதந்திர தின விழா: புதுக்கோட்டை யில் தேசியக்கொடியேற்றி வைத்து ஆட்சியர் மரியாதை

பல்வேறு துறைகளின் சார்பில் சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிக ளை ஆட்சியர் வழங்கினார்

HIGHLIGHTS

சுதந்திர தின விழா: புதுக்கோட்டை யில் தேசியக்கொடியேற்றி வைத்து  ஆட்சியர் மரியாதை
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றி அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர் மெர்சிரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யாதேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று (15.08.2023) நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவ ர்ஐ.சா.மெர்சி ரம்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுதாரர்களை பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். சமாதானத்தை குறிக்கும் வகையில் சமாதான வெள்ளை புறாக்களையும், தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார்.

இவ்விழாவின்போது, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பிற்படுத்தப் பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, தாட்கோ உள்ளிட்ட துறைகளின் சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.62,75,260 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

மேலும் வருவாய்த்துறை, காவல்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேலை வாய்ப்புத் துறை . இந்து சமய அறநிலையத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக பணிபுரிந்த 499 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, அரசு இசைப்பள்ளி, இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இராஜாளிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மாமல்லன் சிலம்ப பயிற்சி பாசறை ஆகிய பள்ளிகளின் சார்பில், 667 மாணவ, மாணவிகளின், வரவேற்பு நடனம், பெண் முன்னேற்றம், உலக அமைதி, பெண் கல்வி, புரட்சி பெண்கள், சமுதாயத்தில் பெண்கள் வளர்ச்சி, தேசப்பற்று மற்றும் சிலம்பாட்டம் ஆகிய பல்வேறு மையக் கருத்துகளை உள்ளடக்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சி யில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள்பெ.வே.சரவணன் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு), ஆர்.ரம்யாதேவி (காவேரி-வைகை-குண்டாறு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, வட்டாட்சியர் விஜயலட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Aug 2023 7:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  5. கோவை மாநகர்
    வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கோவை வ.உ.சி பூங்கா புள்ளி மான்கள்
  6. வீடியோ
    Vijay கட்சியை பற்றி Vetrimaaran கருத்து !#vijay #actorvijay...
  7. வீடியோ
    Viduthalai 2 படத்தின் Update கொடுத்த Vetrimaaran ! #vetrimaaran...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  9. திருவள்ளூர்
    அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
  10. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...