/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 4 மணி நேரமாக பலத்த மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  4 மணி நேரமாக பலத்த மழை
X

புதுக்கோட்டையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் சாலையில் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்து வரும் வாகனம்

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மதுரை, வேலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் , சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மாலை 4 மணி முதல் தொடர்ந்து தற்போது வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது . குறிப்பாக, புதுக்கோட்டை நகர பகுதிகளில் நீதிமன்ற வளாகம், மின்வாரிய அலுவலகம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். தொடர்ந்து 4 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Updated On: 1 Sep 2021 3:08 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஸ்ரீ கண்ணனூர் புது மாரியம்மன் திருவிழா; பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி...
  2. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  4. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  5. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  6. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  7. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  8. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  9. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  10. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!