/* */

புதுக்கோட்டையில் தீபாவளியையொட்டி ஆடுகளின் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சந்தைப்பேட்டை அருகே உள்ள ஆட்டு சந்தையில் வாரவாரம் வெள்ளிகிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் தீபாவளியையொட்டி ஆடுகளின் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
X

தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அருகே உள்ள ஆட்டு சந்தைகள். களைகட்டிய ஆட்டு சந்தை வியாபாரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சந்தைப்பேட்டை அருகே உள்ள ஆட்டுச் சந்தையில் வாரவாரம் வெள்ளிகிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம் சென்ற மாதம் புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகளின் விலை மிகக் குறைந்த விலை இருந்து வந்த நிலையில் ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகளும் வராததால் ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆட்டுசந்தை ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனையாகாமல் திரும்பி வீடுகளுக்கே ஏற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

அது மட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழையால் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களை இழந்து காணப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு ஆட்டு சந்தைகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள ஆட்டுச் சந்தையில் தொடர் மழையின் காரணமாக சேறும் சகதியுமாக இருந்ததால் அருகிலுள்ள வாரச்சந்தையில் உள்ள தகரக் கொட்டகைகளில் ஆட்டு சந்தைகள் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட காலை முதலே விற்பனை களைகட்டியது.

தொடர்ந்து கனமழை மற்றும் புரட்டாசி மாதத்தில் விற்பனையாகாமல் மிகுந்த சிரமம் அடைந்து வந்த ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள் தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுக்கோட்டை மாவட்ட மட்டுமல்ல பேராவூரணி பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தற்போது ஆடுகளை விற்பதற்கு ஆடு வளர்க்கும் விவசாயிகள் விற்பனை செய்வதற்கு ஆடுகளை கொண்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து ஆடுகளின் விலை மிகக் குறைந்து விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரு ஆடுகளின் விலை 7 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆவதால் ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 3 Nov 2021 2:21 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்