/* */

முன்னாள்முதல்வர் கருணாநிதி நினைவு நாள்: மாவட்ட திமுக சார்பில் மாரத்தான்போட்டி

இந்த மாரத்தான் போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

HIGHLIGHTS

முன்னாள்முதல்வர் கருணாநிதி  நினைவு நாள்:   மாவட்ட திமுக சார்பில் மாரத்தான்போட்டி
X

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த கலைஞரின் நினைவு நாளை  முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான்  போட்டி கொடியசைத்து துவக்கி   வைத்த வடக்கு மாவட்ட  பொறுப்பாளர் செல்லபாண்டியன்

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது .

புதுக்கோட்டை நீதிமன்றம் அருகே நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியை, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் கீழராஜவீதி, பழனியப்பா கார்னர், பால்பண்ணை ரவுண்டானா, காளைமாட்டு சிலை ரவுண்டானா, புதிய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் நீதிமன்றம் அலுவலகம் வந்தடைந்தது. இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று வீரர்களுக்கு, திமுக தலைமை நிலையத்திலிருந்து அறிவிக்கப்படும் பரிசுகளும் சான்றிதழ்களும் விரைவில் வழங்கப்படவுள்ளது.

நிகழ்வில், திமுக நகர கழக செயலாளர் க. நைனாமுகமது, வடக்கு மாவட்ட பொருளாளர் செந்தில், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் புதுக்கோட்டை விஜயா, நெசவாளர் அணி அமைப்பாளர் எம் எம் பாலு ,மாவட்ட துணை செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கமலா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முல்லை முபாரக், வழக்கறிஞர் சிவா, வட்டச்செயலாளர் ராஜதுரை, நகரத் துணைச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Aug 2021 3:21 AM GMT

Related News