காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் காவிரி உபரிநீர் குழுவின் சார்பில் காவேரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை தடை செய்யகோரி உச்ச நீதிமன்றம் சென்ற கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காவேரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை தடை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள கர்நாடக அரசை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான குருசாமி, இந்திய விவசாயிகள் சங்கத்தின் தமிழகப் பொதுச்செயலாளர் தனபதி மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.