Begin typing your search above and press return to search.
பகத்சிங் நினைவு தினம்: புதுகையில் மாபெரும் இரத்ததான முகாம்
பகத்சிங் நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் மார்ச் 23 தேதியன்று புரட்சியாளர் பகத்சிங் 91-வது நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கங்களின் சார்பில் மாபெரும் இரத்த தான முகாம் இன்று நடைபெற்றது. இதில் 91 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
நிகழ்வை, கந்தவர்க்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இரத்த தானம் செய்தவர்களை பாராட்டியதோடு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், இணை இயக்குநர் மருத்துவ பணிகள் ராமு, மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.