/* */

தமிழன் பிரசன்னா நீதிமன்றத்தில் ஆஜர்

திமுக மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்

HIGHLIGHTS

தமிழன் பிரசன்னா நீதிமன்றத்தில் ஆஜர்
X

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, நாகுடி, ஆலங்குடி பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இருவரையும் அவதூறாக பேசியதாக மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது.

அதற்காக மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி நகலை பெற்றுக் கொண்டு வெளியே வந்த தமிழன் பிரசன்னா கூறுகையில், பழனிச்சாமி விஜயபாஸ்கர் ஆகியோர் ஜனநாயக ரீதியாக பேசிய என் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்டரீதியாக முடக்க பார்க்கின்றனர். நாங்கள் நேர்மையாகவும், நேரடியாகவும் எதையும் சந்திக்க தயார். எங்களை முடக்க முடியாததால் இவர்கள் எங்களை மிரட்டி பார்க்கின்றனர். நியாமான முறையில் நீதிமன்றத்திலேயே ஆஜராகி உள்ளோம், தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே அமையும் என்று கூறினார்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சிவகுமார் வழக்கறிஞர் திருஞானசம்பந்தம் வழக்கறிஞர்கள் செந்தில் குமார் கருப்பையா விஜயகுமார் உடன் இருந்தனர்.

Updated On: 10 April 2021 3:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!