விதிமீறும் காய்கறி வியாபாரிகள் மீது நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
புதுக்கோட்டையில் விதிமுறைகளை மீறும் காய்கறி வியாபாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
HIGHLIGHTS
கொரோன வைரஸ் தொற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் பெருகி வருவதால் புதுக்கோட்டை நகர பகுதிகளில் செயல்பட்டு வந்த பெரிய மார்க்கெட் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு காய்கறி மார்க்கெட் அனைத்தும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இன்று முதல் தற்காலிகமாக இயங்கும் என நகராட்சி அறிவித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் வியாபாரிகளுக்கு செய்து கொடுத்துள்ளது .
அதன்படி ஒவ்வொரு கடை முன்பும் கட்டங்கள் வரையப்பட்டு தனி மனித இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் வரிசையாக காய்கறிகளை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். அதிகாரிகள் பொதுமக்களிடம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் காய்கறிகள் வழங்கினால் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு அபதாரம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமும் எச்சரித்து வருகின்றனர் .
அதேபோல் காய்கறி சங்கத்தின் சார்பிலும் 10 மணிக்குள் கடைகள் அனைத்தையும் எடுத்து விட வேண்டும் பத்து மணிக்கு மேல் வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காய்கறி சங்கத்தின் சார்பிலும் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர் ஒரே இடத்தில் அனைத்து காய்கறிகளும் கிடைப்பதால் பொதுமக்களுக்கும் சிரமமில்லாமல் நோய்த்தொற்று பரவாமல் கூட்டமாக கூடாமல் இருக்கும் என்ற நோக்கத்திலேயே தற்போது புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி மார்க்கெட் அனைத்தும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
#instanews #tamilnadu #vegetable traders #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #விதிமீறும் #காய்கறி #நடவடிக்கை #காவல்துறை #actionagainst #policealert #எச்சரிக்கை #warning #resellers #vegetabletraders #violatingrules #alert #police #quarantine #lockdown #fulllockdown #selfawareness #stayhome #staysafe