Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டை: 2 மாணவிகள் தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் பங்கேற்பு
தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்தி வழியனுப்பினார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அல்டியஸ் ஸ்போட்ஸ் அகடமி சார்பில் பயிற்சி பெற்று வரும் குத்துச்சண்டை வீராங்கனைகள் ஜீவிதா மற்றும் காவியா ஆகியோர் வரும் 21ம் தேதி ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கவுள்ள 2 வீராங்கனைகளையும் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகர கழக செயலாளர் நைனா முகமது உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.