/* */

புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழா: கடும் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழா: கடும் போக்குவரத்து பாதிப்பு
X

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு   அதிக அளவில் பக்தர்கள் கலந்து   கொண்டதால் கடும் போக்குவரத்து   பாதிப்பு ஏற்பட்டது 

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்தார். இதனால் இன்று மாலை 3 மணி அளவில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், மற்றும் திருச்சி மாவட்டத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தேரோட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சாரை சாரையாக கோவிலுக்கு வந்ததால் நார்த்தாமலை அருகே திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலைகளில் பேருந்துகள் கார்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடும் போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் போக்குவரத்தை சரி செய்வதற்காக காவல்துறை மூலம் காவலர்கள் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் போக்குவரத்து பாதிப்பால் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

Updated On: 11 April 2022 1:28 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்