/* */

பசுமை மாநிலமாக மாற்ற மரக்கன்றுகள் நட வேண்டும் : அமைச்சர் மெய்யநாதன் வலியுறுத்தல்

மரக்கன்றுகள் நடும் பணிகளில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றார் அமைச்சர்

HIGHLIGHTS

பசுமை மாநிலமாக மாற்ற மரக்கன்றுகள் நட வேண்டும் : அமைச்சர் மெய்யநாதன்  வலியுறுத்தல்
X

தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட வேண்டும் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிலட்டூர் பெருமாள் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியினை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று தொடக்கி வைத்தார். பின்னர் அமைச்சர்மெய்யநாதன் பேசியதாவது: தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்றும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணிகளில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் அனைவரும் ஈடுபட வேண்டும். இதன்மூலம், அனைவரும் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.

முன்னதாக, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிலட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் தொடக்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ் முன்னிலையில் நடைபெற்ற. நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஊராட்சிமன்றத் தலைவர் ராணி ராஜா, சிலட்டூர் தங்கவேல், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Jan 2022 8:18 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்